Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 3, 2014

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் 98 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்பு

    ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள, தொடக்க கல்வி அலுவலகத்தில், நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில், 98 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மல்லிகா கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் பங்கேற்க, மொத்தம், 98 ஆசிரிய, ஆசிரியைகள் விருப்பமனு வழங்கி உள்ளனர்.
    முதல் மண்டலமான, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை மற்றும், இரண்டாவது மண்டலமான, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மூன்றாவது மண்டலத்தை சேர்ந்த, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள், பாடவாரியாக கவுன்சலிங்கில் பங்கேற்றனர். மொத்தம், 98 விண்ணப்பங்கள், இந்த மூன்று மண்டலத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அடங்கிய, நான்காவது மண்டலத்தில் இருந்து, பட்டதாரி ஆசிரியர்கள் எவரும், கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்ற, இந்த கலந்தாய்வில், மொழிப்பாடங்கள், சமூக அறிவியலை காட்டிலும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில்தான், ஆசிரியர்கள் அதிகளவில், கவுன்சலிங்கில் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    No comments: