Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 11, 2014

    மத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு

    மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ள வரிச்சலுகையால் மாதச் சம்பளம் பெறும் பிரிவினருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014-15 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போன்று வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் உள்ள முதலீட்டுத் திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, நிரந்தர வைப்பு, வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் இதுவரை ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்வோருக்கு மட்டுமே வரி விலக்கு இருந்தது.
    இப்போது ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்வோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    சொந்தமாக குடியேறியுள்ள வர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டி மீதான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    இந்த மூன்று முறைகளிலும் வரிச் சலுகையை பெறுவோரால் அதிகபட்சமாக ரூ.39 ஆயிரத்து 655 வரை சேமிக்க முடியும் என்று நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    1 comment:

    Anonymous said...

    Already 2000 relaxation. Now only 3000.