"பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஆன் - லைன் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என அரசு தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியோருக்கு மதிப்பெண் பட்டியல் தேர்வு நடந்த மையத்தில் ஜூலை 12 முதல் வழங்கப்பட்டு வருகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 50 ரூபாய் செலுத்தி ஆன் - லைனில் பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு நாளை கடைசி நாள்.
பகுதி - 1 விருப்ப பாடம், பகுதி - 2 மொழி (ஆங்கிலம்) ஆகியவற்றின் தேர்வு விடைத்தாள் நகல் பெற 550 ரூபாய்; பிற பாடங்களுக்கு 275 ரூபாய்; மறு கூட்டலுக்கு பகுதி - 1 விருப்ப பாடம், பகுதி - 2 மொழி (ஆங்கிலம்), உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஒப்புகைச்சீட்டில் குறிப்பிட்டுள்ள படி அறிவிப்புக்கு பின் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி விடைத்தாள் நகல்கள், மறுகூட்டல் குறித்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment