Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 5, 2014

    100% தேர்ச்சி பெற்றும் முன்னேற்றம் இல்லை - புலம்பும் பெற்றோர்

    பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கூடுதல் கட்டடம் கட்டுமான பணி, நிதியின்றி பாதியில் நிற்கிறது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
    வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், பொன்ராமபுரம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த 350 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வில், இப்பள்ளி நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

    நடுநிலைப் பள்ளியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டது என்பதால், பழைய கட்டடங்களில் வகுப்பறை நடந்தது. மத்திய இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், ரூ.49 லட்சத்தில், இரண்டு மாடிகளில் வகுப்பறை, ஆய்வகம், நூலகம், ஆசிரியர், தலைமையாசிரியர் அறை என 10 அறைகள் கட்டப்பட்டது. கடந்த கல்வியாண்டில் துவங்கிய இப்பணி இன்னும் முடிந்தபாடில்லை. மொத்த மதிப்பீடான ரூ.49 லட்சத்தையும் தாண்டி, கூடுதலாக ரூ.20 லட்சம் செலவழித்தால் மட்டுமே கட்டடம் முழுமையடையும் நிலையில் உள்ளது.

    தலைமையாசிரியர் (பொறுப்பு) செல்வக்குமாரிடம் கேட்டதற்கு, "திட்ட மதிப்பீட்டை விட, கூடுதலாக செலவாகி விட்டது. ஒதுக்கப்பட்ட தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டு விட்டது. கூடுதல் மதிப்பீடு கிடைத்ததும் கட்டடம் முழுமையடையும்" என்றார். பெற்றோர் கூறுகையில், "பள்ளியில் கழிப்பிடம், மைதானம், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. போதிய நிதி இல்லாததால், புதிய கட்டடமும் பாதியில் நிற்கிறது.

    கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தால், மாநில, மாவட்ட அளவில் வஞ்சிபாளையம் பள்ளி சாதனை புரியும்" என்றனர்.

    No comments: