Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 14, 2013

    "தனிமையால் மனநலம் பாதிக்கும்"

    தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், மனநலத்துறை சார்பில் உலக மனநல தின விழா நேற்று நடந்தது.


    விழாவுக்கு தலைமை வகித்து, டீன் மகாதேவன் பேசியதாவது: "ஒவ்வொருவரும் மனநலத்தை பேணி காக்க வேண்டியது அவசியம். இதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மனநல தின விழா அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    தனிமை, சுதந்திரம் இன்மையால் தான், முதுமை வயதில் உள்ளவர்களுக்கு மனநோய் வர வாய்ப்பு உண்டாகிறது. இதுகுறித்து உரிய அக்கறை எடுத்து, உரிய சிகிச்சைகளை கவனமாக மேற்கொள்ளவதன் மூலம், மனநோயை எளிதாக குணப்படுத்த முடியும்.

    உலக அளவில், 45 கோடி மக்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, புள்ளிவிபரம் கூறுகிறது. நாம் சந்திக்கும், நான்கு பேரில் ஒருவருக்கு, மன நல பாதிப்பு உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. இதற்கு உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். இதற்குரிய சிறப்பு கவனத்தை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மனநலம் குறித்து குறும்படம் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடம் மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    No comments: