Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 14, 2013

    இயலாக்குழந்தைகளுக்கு பால், பழம், பிஸ்கட் வழங்க "ஸ்பான்சர்" தேடும் அதிகாரிகள்

    மதுரை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) நிதிக்குறைப்பால் அரசு பகல் நேர பராமரிப்பு மையங்களில், இயலாக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால், பழம், பிஸ்கட்கள் ஆகிய ஊட்டச்சத்து உணவுகள் இந்தாண்டு நிறுத்தப்பட்டன.


    மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் இம்மையங்கள் செயல்படுகின்றன. இங்கு 6 முதல் 18 வயது வரை 300 இயலாக்குழந்தைகள் பகல் நேரத்தில் தங்கி படிக்கின்றனர். இதற்கு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது.

    இதில், மதிய உணவுடன் ஊட்டச்சத்துக்காக, குழந்தைகளுக்கு இருவேளை 150 மி., பால், ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட், பழங்கள், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. மேலும், வீட்டில் இருந்து மையத்திற்கு குழந்தைகளை அழைத்துவர வாகன வாடகையாக, ஒரு மையத்திற்கு ரூ.4,300 வழங்கப்பட்டன.

    மாநிலம் முழுவதும் இந்தாண்டு எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டது. இதனால், சிக்கன நடவடிக்கையாக இம்மையங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த பால், பழம், பிஸ்கட்டுகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன.

    மேலும், இத்திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவு, சீருடைகளும் நிறுத்தப்பட்டு, மாநில அரசின் மதிய உணவும், சீருடையும் வழங்கப்படுகிறது. இதனால், இயலாக்குழந்தைகள் பரிதவிப்பில் உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து, மைய பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், நிறுவனங்களில் இருந்து உதவி பெற்று, பால், பழங்கள், பிஸ்கட் வழங்குகின்றனர். நல்ல உள்ளம் படைத்தவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவி செய்ய முன் வரலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: