Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 24, 2013

    மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்...

    கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    கோவை மாநகராட்சியில் 10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மாநகராட்சி பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் சோர்வு மற்றும் பசியை போக்கும் வகையில் மாலை நேர சிற்றுண்டி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

    மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 2550 மாணவர்களுக்கும், பிளஸ் 2 படிக்கும் 2450 மாணவர்களுக்கும், மாலை நேர சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வழங்கப்படும் சிற்றுண்டிகள்

    சுக்கு டீ 100 மில்லி, வல்லாரை சூப் 150 மில்லி, தூதுவளை சூப் 150 மில்லி (ஏதாவது ஒன்று) வழங்கப்படும். சோயா சுண்டல் 100 கிராம், கருப்பு கொண்டை கடலை சுண்டல் 100 கிராம், பாசிப்பயறு சுண்டல் 85 கிராம் (ஏதாவது ஒன்று), ராகி புட்டு 100 கிராம், மக்காச்சோளப்புட்டு 100 கிராம், அரிசி புட்டு 100 கிராம் (ஏதாவது ஒன்று) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சிற்றுண்டி பொருட்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு பிரித்து வினியோகம் செய்யப்படும். சிற்றுண்டிக்காக ஒரு மாணவனுக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய் செலவிடப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என்றனர்.

    No comments: