Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 24, 2013

    மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

    மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நாடு முழுவதும் ஒரே பொதுநுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்துசெய்ததை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

    நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, NEET எனப்படும் பொது நுழைவுத்தேர்வை நடத்த MCI முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் பரவலான அளவில் எதிர்ப்பு எழுந்தது.

    சாதாரண வெகுமக்களை மருத்துவ படிப்பை மேற்கொள்வதிலிருந்து தடுக்கும் திட்டம் இது என்று பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி கபீர் தலைமையிலான அமர்வு, கடந்த ஜுலை மாதம், இந்த ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை செயல்பாடு தொடர்பான முடிவிற்கு தடை விதித்தது. மேலும், இப்படியொரு முடிவை மேற்கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அரசியல் சட்டப்படி அதிகாரம் இல்லை என்று தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

    ஆனால், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தனது முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

    No comments: