Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 15, 2013

    நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி?

    விமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.

    காழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது

    பயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது

    இரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது

    ஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது

    பகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது

    அவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.

    ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.

    சகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.

    புகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.

    உரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.

    திருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது

    அங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது

    விட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு வாழ்கிறது.

    நேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.

    நியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.

    கருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.

    பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.

    நட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம் என்பதைக் கற்றுக் கொள்கிறது.

    சிறந்த பெற்றோர்க்கான குறிப்புகள்:

    குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.

    பெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.

    ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப்படுத்துவது.

    குழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.

    வயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.

    பெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.

    தேவையான அளவு அன்பு காட்டுவது.

    மன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.

    திரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.

    நல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.

    தகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.

    குடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.

    நாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.

    No comments: