Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 14, 2013

    தனித்திறன் குறைபாடே வேலையின்மைக்கு காரணம்: பிரதமரின் ஆலோசகர் பேச்சு

    "இன்றைய தொழில்நுட்ப உலகின் மாற்றங்களுக்கு தகுந்தவாறு இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம். தனித்திறன்குறைபாட்டின் காரணமாக பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது" என, பிரதமரின் ஆலோசகர் ராமதுரை பேசினார்.

    கோவை எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யா பீட பல்கலையின் 10வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் நடந்தது. பிரதமரின் ஆலோசகர் (மத்திய திறன் மேம்பாடு) ராமதுரை, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:

    "தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறையின் வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீத அளவுக்கு பங்களிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1.25 கோடி மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.

    ஆனால், தகுதியான வேலை பெறுவதற்கான திறன் குறைபாட்டால், வேலைவாய்ப்பு பெறுவது கடினமாகிறது. உற்பத்தி சந்தையில், பல்வேறு போட்டிகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

    மத்திய அரசு உற்பத்தி துறையில், 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கவனம் செலுத்தி வருகிறது. வரும் ஆறு ஆண்டுகளுக்குள், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதுமையான சிந்தனைகளுடன் கூடிய 2 கோடி பேர் பணிக்கு தேவைப்படுவர். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

    போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்." இவ்வாறு, அவர் பேசினார்.

    விழாவில், பல்வேறு பாடப்பிரிவுகளை சேர்ந்த 4,385 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    No comments: