Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 16, 2013

    தனியார் பள்ளிகளுக்கே பொதுத்தேர்வு மையம்: அரசுப் பள்ளிகளுக்கு ஆர்வமில்லை

    பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையம் அமைப்பதில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 150 மாணவர்கள்; நகரங்களில் 200 பேர், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதினால், அப்பள்ளிகளில் தேர்வு மையம்
    அமைக்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை, இதை விட குறைவாக இருந்தால், அருகில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று எழுத வேண்டும். சில ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளுக்கே, தேர்வு மையம் அனுமதிக்கப்படுகிறது. "தேர்வு மையம் அமைந்தால், பணிச்சுமை அதிகரிக்கும்" என்ற மனநிலையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்; இதனால், அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதைப் பயன்படுத்தி, சில தனியார் பள்ளிகள், அருகில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்விருப்பக் கடிதம் பெற்று, தேர்வு மையங்களை தட்டிச் செல்கின்றனர்.  "கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு, இதுவும் ஒரு காரணம்" என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசுப் பள்ளிகள் விண்ணப்பித்தால், மையம் அமைக்க அனுமதிக்கிறோம். அருகில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே, தனியார் பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்கப்படும்" என்றார்.

    No comments: