Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 13, 2013

    அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவையில்லை.ஐகோர்ட்டு உத்தரவு

    சென்னை ஐகோர்ட்டில், திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு மெமோரியல் கல் லூரியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘எங்கள் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

    கல்லூரிகளில் அரசு அனுமதித்துள்ள பணியிடங்களில், காலியிடம் ஏற்படும் போது, அதை நிரப்புவதற்கு கல்லூரி கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற வண்டும் என்று தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்திலும், விதிகளிலும் கூறப்பட வில்லை.
    மேலும், ஒருவருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும், இந்த பணி நியமனம் என்பது கல்லூரி கல்வி இயக்குனரின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றுதான் குறிப்பிடப்படுகிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

    No comments: