Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 23, 2013

    கற்கும் ஆர்வத்தை அதிகரிப்பது எப்படி?

    "மறைந்த தலைவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஆசிரியர்கள் பாடத்தோடு கலந்து கற்பிக்கும்போது, மாணவர்களிடையே கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்" என, ஆசிரியர் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனைமலை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு குறித்து பயிற்சி நடந்தது. ஆனைமலை வட்டார வள மேற்பார்வையாளர் அருணாதேவி துவங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் அமிர்தவல்லி, ஹேமலதா, விசாலாட்சி, அம்சராணி, சத்தியமூர்த்தி மற்றும் விஜய பாஸ்கர் பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில் குழந்தைகளுக்கு சமூக விழிப்புணர்வை வளர்த்தல், நன்னெறி முறையில் வாழும் திறன், ஜனநாயகப் பண்புள்ள குடிமக்களை உருவாக்கும் திறன், கணினி மூலம் ஏற்படும் நன்மை, தீமைகள், இணையம் மூலம் நல்லவற்றை தேர்தெடுத்து படிப்பது, இணைய சீர்கேடுகளிலிருந்து தன்னை தானே பாதுகாத்து கொள்வது பற்றி பயிற்சியளிக்கப்பட்டது. இதில் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    பயிற்சியில் அதிகாரிகள்  பேசியதாவது: "இன்றைய காலகட்டத்தில், மாணவர்களிடையே மல்டி மீடியாக்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவற்றை தவறான முறையில் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

    தற்காலத்தில் மொபைல் போன்களில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் பொறுப்பு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மொபைல்போன் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்வது நல்லது.

    தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கு தகுந்த நிகழ்சிகளை மட்டுமே பார்க்க வலியுறுத்த வேண்டும். பசிக்கு உணவு அளிப்பது அறம்; உணவோடு படிப்பையும் அளிப்பது அறிவாளித்தனம் என்பதை அறிந்த, மறைந்த தலைவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

    சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை இன்றைய காலகட்டத்தோடு தொடர்பு படுத்தி மாணவர்களுக்கு நாட்டுபற்றையும், நேர்மையையும் வளர்க்க வேண்டும்." இவ்வாறு, அவர்கள் பேசினர்.

    No comments: