Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 9, 2013

    "சைபர் கிரைம்" குறித்து 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

    "சைபர் கிரைம்" எனப்படும், இணையவழி குற்றங்களில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்து, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளது.

    ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சமுதாய விழிப்புணர்வு குறித்தும், "சைபர் கிரைம்" நடவடிக்கைகளில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்தும், 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, சென்னையில், நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    நாளை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர் கல்வி நிறுவன பேராசிரியர்கள், பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்களைக்கொண்டு, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியைப் பெறும் ஆசிரியர், மாவட்டங்களுக்கு சென்று, பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இப்படியே, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும்.

    பின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். "சைபர் கிரைம்" குறித்து, டி.எஸ்.பி., வெங்கடாசலபதி, நேற்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் கூறுகையில், "இணையதளத்தை, ஆக்கப்பூர்வமான முறையில், எப்படி பயன்படுத்துவது, மொபைல் போன்களை, எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும், இணையதள ஆபத்துகளில் இருந்து, சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

    No comments: