Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 18, 2013

    குரூப் - 1 தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

    "குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை 50 வயதாக உயர்த்த வேண்டும்" என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலர், தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கு, பொதுப் பிரிவினருக்கு 30 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குரூப் - 1 தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை. கடந்த 12ஆண்டுகளில், ஐந்து முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

    இதனால், பல ஆயிரக்கணக்காணோர், குரூப் - 1 தேர்வு எழுது முடியாமல் போகிறது. கேரளாவில், குரூப் - 1 தேர்வு எழுத வயது வரம்பு, 50ஆகவும், மேற்குவங்கம், திரிபுரா, அரியானா, அசாம், குஜராத் மாநிலங்களில், 45 ஆகவும் உள்ளது. எனவே, தமிழகத்திலும் குரூப் - 1 தேர்வு எழுத, பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு, 50 ஆகவும் வயது வரம்பை உயர்த்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பாண்டியன் கூறியுள்ளார்.

    No comments: