Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 12, 2013

    குரூப் 1 தேர்வு; வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

    குரூப் 1 தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை, 45ஆக அதிகரிக்கக் கோரி, குரூப் 1 தேர்வர் கூட்டமைப்பினர், சென்னையில், நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகில் நடந்த போராட்டத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர், தா.பாண்டியன் துவக்கி வைத்து பேசியதாவது: கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், குரூப் 1 தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பு, அதிகமாக உள்ளது. நீங்கள், 45 வயதாக உயர்த்த வேண்டும் என, கேட்பதில் தவறில்லை.

    நீங்கள், வேலை வாய்ப்பை கேட்கவில்லை. தேர்வை எழுதுவதற்கான வாய்ப்பைத் தான் கேட்கிறீர்கள். இது, நியாயமான கோரிக்கை. இதை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இவ்வாறு, பாண்டியன் பேசினார்.

    இதுகுறித்து, தேர்வர்கள் சிலர் கூறியதாவது: கேரளாவில், 50 வயது வரை, குரூப் 1 தேர்வை எழுதலாம். குஜராத், அரியானா, மேற்கு வங்கம், அசாம், உ.பி., ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், அனைத்து பிரிவினருக்கும், வயது வரம்பு, 45ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், 35 வயது என, மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில், குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை, 45ஆக உயர்த்த, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.

    No comments: