
இதனிடையே சில மாற்றங்களை செய்து இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக மத்திய/ மாநில அரசு ஊழியர் சங்கங்கள் (CITU, DREU, LIC, BSNLEU, BEFI, TNGEA மற்றும் TNPTF) இன்று அறிவித்திருக்கும் போராட்டத்தில் அச்சங்க கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கு கொள்கிறது.
அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் இம்மசோதாவை நிறைவேற்றாமல் தடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வலுக்கொண்டு இம்மசோதாவை மத்திய/ மாநில தொழிற்சங்கங்கள் இணைந்து போராடினால் மட்டுமே சாத்தியம் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் அழைப்பு விடுத்துள்ளது.
No comments:
Post a Comment