Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 14, 2013

    நிதி வழங்கப்படாததால் மாணவ விளையாட்டு வீரர்கள் விரக்தி; "ஊனமான" விளையாட்டு துறையால் சோர்வு

    மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பள்ளி விளையாட்டு போட்டிக்கான நிதி வழங்கப்படாததால் மாணவ விளையாட்டு வீரர்கள் விரக்தியில் உள்ளனர்.

    பள்ளி கல்வித்துறையில், மாணவர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.7ம், 9 மற்றும் பத்தாம் வகுப்புக்கு தலா ரூ.14ம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கு தலா ரூ.21ம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். விளையாட்டு போட்டிகளுக்கான நுழைவுக் கட்டணம், போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவு உட்பட பல்வேறு செலவினங்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும்.

    மதுரை மாவட்டத்தில் 14 மண்டலங்களில், ஒவ்வொன்றிலும் 700 முதல் 800 மாணவ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்நிதி வழங்கப்படவில்லை. இதனால், மாணவ வீரர்கள் விளையாட, வெளியூர் செல்லும்போது சாப்பாடு, பயணம் உட்பட செலவுகளை அவர்களே மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால், பண வசதி இல்லாத, திறமை படைத்த மாணவர்கள் பலர் மாவட்ட, மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவர்களுக்கு விளையாட்டு நிதி, 30 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை தொடர்கிறது. டிவிஷன் மற்றும் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் பயணச் செலவு தவிர்த்து, சாப்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு ரூ.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

    ஒரு வீரர் ரூ.50க்குள் மூன்று வேளை சாப்பிட முடியுமா? பள்ளி கல்வித்துறையில் விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி கண்துடைப்பாகவே உள்ளது. நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து, இதை மாற்றியமைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    No comments: