Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 18, 2013

    போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்கள் 9 பேர் விரைவில் பணி ­நீக்கம் ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை

    போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்து மாந­க­ராட்சி பள்­ளி­களில் ஆசிரியர்க­ளாக உள்ள ஒன்­பது பேர் விரைவில் பணி நீக்கம் செய்­யப்­பட உள்ளனர். ஓரிரு நாளில் அவர்கள் கைது செய்­யப்­ப­டுவர் என, மாந­க­ராட்சி வட்டாரங்கள் தெரி­வித்­தன.

    சென்னை மாந­க­ராட்சி பள்­ளியில் பணி­பு­ரியும் இடை­நிலை ஆசி­ரி­யர்கள் பலர் போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்­தி­ருக்கும் அதிர்ச்சி தகவல் சமீ­பத்தில் வெளி­யா­னது. 
    இது­கு­றித்து எழுந்த புகாரை தொடர்ந்து மாந­க­ராட்சி கல்வி துறை அதி­கா­ரிகள் விசாரித்தனர். இதில், முதல்­கட்­ட­மாக சந்­தேக வலையில் இருந்த 76 ஆசி­ரி­யர்­களின் சான்­றி­தழ்கள் ஆய்வு செய்­யப்­பட்­டன. அவற்றில், ஒன்­பது பேரின் சான்­றி­தழ்கள் போலி என, உறு­தி­யா­னது.
    இந்த ஒன்­பது பேரும் 10ம் வகுப்பு பொதுத்­தேர்வு சான்­றிதழ் முதல் ஆசிரியர் பயிற்சி சான்­றிதழ் வரை பல்­வேறு கட்டங்­களில் போலி சான்­றி­தழ்­களை வழங்­கி­யுள்­ளனர். ஐந்து ஆசி­ரி­யர்கள், 10ம் வகுப்பு பொதுத்­தேர்வில் தேர்ச்சி பெற­வில்லை. மறு­தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெறாமல், தேர்ச்சி பெற்றதாக போலி சான்­றிதழ் வழங்­கி­யுள்­ளனர்.
    பிளஸ் 2 தேர்வில் நான்கு ஆசி­ரி­யர்கள் தேர்ச்சி பெற­வில்லை. ஆனால், தேர்ச்சி பெற்­ற­தாக போலி சான்­றிதழ் வழங்­கி­உள்­ளனர். ஆறு ஆசி­ரி­யர்கள் ஆசி­ரியர் பட்­டய பயிற்சி பெற்­ற­தாக வழங்­கி­யுள்ள சான்­றி­தழ்கள் போலியானவை.
    இதை­ய­டுத்து, மாந­க­ராட்சி நிர்­வாகம் கல்வி அதி­காரி ரவிச்­சந்­திரன் மூலம் கடந்த சில தினங்­க­ளுக்கு முன் போலீஸ் கமி­ஷ­ன­ரிடம் புகார் அளித்­தது.
    அதன் அடிப்­ப­டையில் ஆசி­ரி­யர்கள் ஒன்­பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
    இதற்­கி­டையே, அவர்­க­ளுக்கு நோட்டீஸ் வழங்கி, பணி நீக்கம் செய்ய முடிவு செய்து, அதற்­கான பணியில் மாநக­ராட்சி இறங்­கி­யுள்­ளது. ஒன்­பது போலி ஆசி­ரி­யர்கள் பெயரை மாநகராட்சி அதிகா­ர­பூர்­வ­மாக வெளியிட­வில்லை.
    தொடர் விசா­ர­ணையில் போலி சான்றிதழ் ஆசி­ரி­யர்கள் இன்னும் சிலர் சிக்குவர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும், தற்­போது சிக்­கி­யுள்­ள­வர்கள் அனை­வரும், 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்­டுக்குள் பணியில் சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு கணி­ச­மான தொகையை லஞ்­ச­மாக கொடுத்து பணியில் சேர்ந்­தி­ருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.
    இதனால் அப்­போது மாந­க­ராட்சி கல்வி துறையில் யார், யாரெல்லாம் அதிகாரி­க­ளாக பணி­பு­ரிந்­தார்­களோ அவர்­களும் விசா­ரணை வளை­யத்­திற்குள் வருவார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

    No comments: