இதுகுறித்து SSTAன் பொதுச்செயலாளர் திரு.இராபர்ட் கூறுகையில், மாவட்ட மாறுதலில் இனி வரும் காலங்களில் எல்லா இடைநிலை ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம்.நான்கு ஆண்டுகளாக கண்ட கனவு பலித்தது.உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் இடைக்கால உத்தரவில் உள்ள 2009க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதலில் செல்லக்கூடாதென இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது நம்முடைய தீரா தாகத்தை தீர்த்தது என்றும், மேலும் இந்த வழக்கு வெற்றிபெற உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். குறிப்பாக இந்த வழக்கு சார்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொண்ட சேர்த்த TNKALVIக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment