Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 8, 2013

    பள்ளிக்கல்வியை மேம்படுத்த ரூ.14,000 கோடி ஒதுக்கீடு"

     கோவை: "பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் கருதிதமிழக அரசு 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது," எனதமிழக பள்ளி மற்றும்

    உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

    பீளமேடுபி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி பொன்விழா நிறைவு நாள் நிகழ்ச்சிநேற்று மாலை நடந்தது. தமிழக பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:

    "கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்தால்பல்துறைகளும் நல்ல வளர்ச்சி பெறும் என்பதால்தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து செயல்படுகிறது.

    மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில்புதிதாக 51 அரசு கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு பின் பல்துறைகளிலும் எத்தகைய வளர்ச்சி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் "விஷன் 2023" திட்டத்தை வகுத்துள்ளார்.

    உயர்கல்வி கற்போர் விகிதம் அகில இந்திய அளவில்15 சதவீதம்,சர்வதேச அளவில் 23 சதவீதம்வளர்ந்த நாடுகளில் 54 சதவீதம்,தமிழகத்தில் 19 சதவீதமாக உள்ளது. பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது." இவ்வாறுஅவர் பேசினார்.


    தமிழக வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் பேசுகையில், "இன்றைய இளைஞர்களின் அறிவுப்பசியை பூர்த்தி செய்யும் வகையில்ஆசிரியர்கள் தங்களின் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்," என்றார்.

    No comments: