Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 8, 2013

    இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாளையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

    இலங்கையில் தனிஈழம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக் சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழ தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
    ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு, அனைத்து ஆசிரியர் சங்கம் ஆகியவை சார்பில் பாளை மார்க்கெட் திடலில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    இதற்கு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கிப்சன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு உயர்நிலை குழு உறுப்பினர் செல்வகுமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நகர செயலாளர் ஜார்ஜ் இனிகோ ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அரிகரன், மாநில தலைவர் கார்த்திக்கேயன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் வேல்முருகன், செயலாளர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணை செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். தமிழர் நல உரிமை இயக்க தலைவர் அறிவரசன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை உண்ணாவிரதத்தை பேராசிரியர் தொ.பரமசிவன் முடித்து வைக்கிறார்.

    No comments: