Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 30, 2013

    மாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் வைகைச் செல்வன்

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளியில், உலக புத்தக தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். குணசேரன், ஆர்.டி.ஓ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பகவதி முன்னிலை வகித்தனர்.
    சென்னை பொது நூலக இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பள்ளி கல்வி துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது:

    உலக புத்தக தினத்தையொட்டி தமிழகம் எங்கும் நூலகத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நூலக துண்டு பிரசுர வினியோகம், கையெழுத்து இயக்கம், கட்டுரை போட்டி, நூலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு வில்லை வழங்குதல், நூலகத்துறை சார்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் "ஜெய ஜெய வெற்றி பேரியக்கம்" திட்டம் உட்பட பல நிகழ்வுகள் நடந்து வருகிறது.

    நூலர்கள் தாங்கள் செய்யும் பணியை கடமை உணர்வோடு செய்ய வேண்டும். கிராம புற நூலகர்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராம புற இளைஞர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

    நல்ல அறிவுடன் கூடிய திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது. அதனால், பொறுப்புடன் செயல் ஆற்றுங்கள். தன்னலம் இல்லாமல் கடமையாற்றுபவர்களை தேடி பிடித்து அவர்களை உயர்த்தும் எங்கள் அரசு. விருதுநகர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை உள்ளது.

    மேலும், நூலகர்களின் கோரிக்கைகளை தாயின் பரிவுடன் இந்த அரசு செய்யும், என அவர் பேசினார்.

    No comments: