அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளியில், உலக புத்தக தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். குணசேரன், ஆர்.டி.ஓ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பகவதி முன்னிலை வகித்தனர்.
சென்னை பொது நூலக இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பள்ளி கல்வி துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது:
உலக புத்தக தினத்தையொட்டி தமிழகம் எங்கும் நூலகத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நூலக துண்டு பிரசுர வினியோகம், கையெழுத்து இயக்கம், கட்டுரை போட்டி, நூலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு வில்லை வழங்குதல், நூலகத்துறை சார்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் "ஜெய ஜெய வெற்றி பேரியக்கம்" திட்டம் உட்பட பல நிகழ்வுகள் நடந்து வருகிறது.
நூலர்கள் தாங்கள் செய்யும் பணியை கடமை உணர்வோடு செய்ய வேண்டும். கிராம புற நூலகர்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராம புற இளைஞர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.
நல்ல அறிவுடன் கூடிய திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது. அதனால், பொறுப்புடன் செயல் ஆற்றுங்கள். தன்னலம் இல்லாமல் கடமையாற்றுபவர்களை தேடி பிடித்து அவர்களை உயர்த்தும் எங்கள் அரசு. விருதுநகர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை உள்ளது.
மேலும், நூலகர்களின் கோரிக்கைகளை தாயின் பரிவுடன் இந்த அரசு செய்யும், என அவர் பேசினார்.
உலக புத்தக தினத்தையொட்டி தமிழகம் எங்கும் நூலகத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நூலக துண்டு பிரசுர வினியோகம், கையெழுத்து இயக்கம், கட்டுரை போட்டி, நூலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு வில்லை வழங்குதல், நூலகத்துறை சார்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் "ஜெய ஜெய வெற்றி பேரியக்கம்" திட்டம் உட்பட பல நிகழ்வுகள் நடந்து வருகிறது.
நூலர்கள் தாங்கள் செய்யும் பணியை கடமை உணர்வோடு செய்ய வேண்டும். கிராம புற நூலகர்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராம புற இளைஞர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.
நல்ல அறிவுடன் கூடிய திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது. அதனால், பொறுப்புடன் செயல் ஆற்றுங்கள். தன்னலம் இல்லாமல் கடமையாற்றுபவர்களை தேடி பிடித்து அவர்களை உயர்த்தும் எங்கள் அரசு. விருதுநகர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை உள்ளது.
மேலும், நூலகர்களின் கோரிக்கைகளை தாயின் பரிவுடன் இந்த அரசு செய்யும், என அவர் பேசினார்.
No comments:
Post a Comment