Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 25, 2013

    சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில் வரி இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதி

     "சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில், வரி விதிக்கப்படுவதில்லை; இந்தியர்கள் தராளமாக சிந்திக்கலாம்," என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
    மறைமுக வரி வல்லுநர்கள் கூட்டமைப்பின், நான்காவது ஆண்டு விழா, நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. இதில், ராம சுப்ரமணியன் பேசியதாவது:

    "இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், வரி விதிப்பு பற்றிய துறையில், படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உள்ளன. வரியை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கண்ணில் காணும் அனைத்தும் வரியுடன் காணப்படுகின்றன.

    சம்பளம் வாங்குவோர் வரி கட்டும் நேர்மையை விட, வணிகம், தொழில் செய்வோரின் நேர்மை மிகவும் உயர்ந்தது. ஏனெனில், ஏமாற்ற வாய்ப்பிருந்தும், ஏமாற்றாதவர் தான், சிறந்த வாய்மையானவர்.

    இந்தியாவில் தற்போது, சிந்திப்பதற்கு மட்டும் தான் வரி இல்லை. எனவே, இந்திய மக்கள் தராளமாக சிந்திக்கலாம். அனைவரும் வரியை, மறைக்காமலும், காலதாமதமும் இன்றி செலுத்த வேண்டும்." இவ்வாறு, நீதிபதி பேசினார்.

    நிகழ்ச்சியில், சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments: