Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 27, 2013

    எங்கும் தொல்லை, எதிலும் தொல்லை... ஓர் அரசுப் பள்ளியின் அவலம்

    பகலில் "பார் பார் பட்டம் பார்" என, மாணவர்களுக்கு கற்பிக்க பயன்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் "சூப்பர் பார்" ஆக பயன்படுத்தப்படுகிறது.
    தொண்டாமுத்தூர் ஒன்றியம் பச்சாபாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். சிறுவாணி மெயின்ரோடு, பச்சாபாளையம் பிரிவிலிருந்து 1 கி.மீ தொலைவில், ரோட்டோரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. இரவு நேரங்களில், இப்பள்ளி கட்டடத்தின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழையும் சமூகவிரோதிகள் மதுஅருந்துவது, சீட்டாடுவது உள்ளிட்ட சமூகவிரோத காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் ரோந்து வரும்போது, பள்ளியின் தெற்கு பகுதி வழியே உள்ள பள்ளத்தில் குதித்து அங்கிருந்து தப்பியோடி விடுகின்றனர். இதுதவிர, பள்ளி எதிரே சரியான பராமரிப்பற்ற நிலையிலுள்ள பொதுகழிப்பிடம் மற்றும் குப்பை குவியல்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பள்ளி எதிரே குவியும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் எழும் புகையால், மாணவர்களும் அவ்வழியே செல்வோரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

    வாரநாட்கள் விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை வரும்போது, பள்ளி மைதானம், சாக்கடை வடிகால் பகுதிகளின் ஓரங்களில் மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது. என்ன செய்வதென தெரியாமல் பள்ளி நிர்வாகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாடம் படிக்கும் பள்ளிக்குள் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க, போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    No comments: