Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 26, 2013

    இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கவும், உடனடியாக இடைகால நிவாரணமாக 2009-க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு 1.86ஆல் பெருக்கி வழங்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடத்த SSTA முடிவு.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய விகிதத்தை PB-1ல் இருந்து PB-2 மாற்றி வழங்க வலியுறுத்தியும், உடனடியாக இடைகால அடிப்படையில் 01.06.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மே 4ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடத்த இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு. இராபர்ட் கூறுகையில் ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை
    ஆசிரியர்களின் ஊதிய விகிதம் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் 6வது ஊதிய குழுவிற்கு முன் மற்றும் பின் என இரு வேறுப்பட்ட ஊதியம் பெரும் அவலநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது எனவும், எனவே இது குறித்து தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றவும், உடனடியாக இடைகால அடிப்படையில் 1.6.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86 ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் வருகிற மே 4ல் மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  மேலும் RTE சட்டப்படி தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு சட்டப்படி தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தகுதியின் அடிப்படையில் மட்டும் 10000 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    No comments: