Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 30, 2013

    கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்

    மாணவர்களிடம் சட்ட விரோதமாக கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என "மூட்டா" பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    மதுரை காமராஜர், நெல்லை சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை., ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (மூட்டா) பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. மூட்டா தலைவர் மனோகர ஜஸ்டஸ் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் நாகராஜன், மேரி ஜேசபின், ஜான்சன் முன்னிலை வகித்தனர். பொது செயாலளர் சுபாராஜூ இணை பொது செயலாளர்கள் உமாதேவி, கணேசன், பொருளாளர் பாண்டி பேசினர்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை எவ்வித தாமதமும் இல்லாமல் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்கலைக்கழகம், பல்கலை., உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பணிபாதுகாப்பு தொடர்பான மூட்டாவின் கோரிக்கைகளை அரசும் பல்கலைக்கழகமும் எடுக்காத நிலையில், வரும் மே 2ம் தேதி மதுரை மற்றும் நெல்லை பல்கலை., முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி கட்டண கொள்ளையடித்த கோவில்பட்டி கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவர்களிடம் சட்ட விரோதமாக கட்டண வசூல் செய்யும் கல்லூரிகள் மீது விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments: