Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 6, 2013

    கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்

    படிப்போடு, வேலை வாய்ப்புக்குரிய கூடுதல் திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும்" என, "தினமலர்" நாளிதழ் வர்த்தக மேலாளர், லட்சுமிபதி, மாணவர்களுக்கு, அறிவுரை வழங்கினார்.
    "வழிகாட்டி" நிகழ்ச்சியில் கருத்தரங்கை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழகத்தில், ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மாணவர்கள், பொறியியல் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.

    ஒரு பொறியாளர் வேலைக்கு, 17 பேர் போட்டியிடுவதாக, சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பொறியியல் படிப்பை முடித்து வெளியில் வரும் மாணவர்கள், வேலைக்குரிய தகுதியை வளர்த்து கொள்வதில்லை. இதனால், முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைக்காத நிலை நிலவுகிறது. வேலை தேடுபவர்கள், கூடுதல் திறமைகளை வளர்த்து மட்டுமே, தனித்து நிற்க முடியும்.

    ஒரு நிறுவனத்தில், 100 பேரில் ஒருவரை, வேலைக்கு தேர்வு செய்தால், அந்த ஒருவர், நீங்களாக இருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகத்தில், பாடத்தில் கூடுதல் அறிவு, தகவல் தொடர்பு திறன் வளர்த்தல் உள்ளிட்ட கூடுதல் திறமைகளை வளர்த்து கொண்டால், வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புடன், ஸ்மார்ட் போனில், அப்ளிக்கேஷன் டெவலப் செய்ய தெரிந்தால், கூடுதல் திறமைக்காக இத்துறையில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். அது போல, சிவில் இன்ஜினியரிங் படிப்புடன், "ஆட்டோ கேட்" படிப்பையும் முடித்தால், வேலை வாய்ப்புகளை பெறலாம்.

    படிப்பு சார்ந்த தொழில் திறனை வளர்த்து கொண்டால் எளிதில் முன்னேறலாம். உபயோகப்படும் ஒரு பொருளை கஷ்டப்பட்டு தேடி, தேடி தேர்ந்தெடுப்பதை போல, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்லூரிகளை தேர்வு செய்வதிலும், கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, லட்சுமிபதி பேசினார்.

    No comments: