Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 6, 2013

    அரசு கல்லூரி உட்பட தமிழகத்தில் 15 கல்லூரிகளுக்கு ஏ-கிரேடு

    தமிழகத்தில் உள்ள, 15 கல்லூரிகளுக்கு, "ஏ" கிரேடு மற்றும், 30 கல்லூரிகளுக்கு, "பி" கிரேடு அந்தஸ்துகளை, தேசிய தர நிர்ணய குழு (நாக்) வழங்கியுள்ளது. இதில் கோவை அரசு கலைக் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது.
    "நாக்" அங்கீகாரத்தைப் பெற்ற கல்வி நிலையங்கள் மற்றும் அங்கீகாரம் பெற விண்ணப்பித்த கல்வி நிலையங்களில், "நாக்" குழு நடத்திய ஆய்வுக்கு பின், இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.

    அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் தரத்தை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, "நாக்" குழு ஆய்வு செய்கிறது. இதில், அங்கீகாரம் தொடருவது மற்றும் புதிய அங்கீகாரம் வழங்குவது ஆகியன குறித்து, ஆய்வு செய்யப்படுகிறது.

    "ஏ, பி, சி" என, மூன்று நிலைகளில், கல்லூரிகள் தரம் பிரிக்கப்படுகின்றன. 3 முதல், 4 புள்ளி பெற்ற கல்லூரிகளுக்கு, "ஏ" அந்தஸ்தும்; 2 முதல், 3 புள்ளிகள் பெற்ற கல்லூரிகளுக்கு, "பி" அந்தஸ்தும்; 1 முதல், 2 புள்ளிகள் பெற்ற கல்லூரிகளுக்கு, "சி" அந்தஸ்தும் வழங்கப்படுகின்றன. 0.1 புள்ளிகள் பெறும் கல்லூரிகளின் அங்கீகாரம், ரத்து செய்யப்படுகிறது.

    கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், நிர்வாகம், வேலைவாய்ப்பு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், சமூக சேவை உள்ளிட்ட இதர செயல்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதாசாரம் உள்ளிட்ட விதிகளை, அடிப்படையாக கொண்டு, "நாக்" குழு ஆய்வு நடத்துகிறது.

    இந்த சூழ்நிலையில், நாட்டில் உள்ள, 126 கல்வி நிலையங்களில், "நாக்" குழு ஆய்வு நடத்தியது. தமிழகத்தில், 15 கல்லூரிகளுக்கு, "ஏ" கிரேடு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இதில், நான்கு கல்லூரிகள், முதல் முறையாக, "ஏ" கிரேடு அந்தஸ்தை பெறுகின்றன.

    30 கல்லூரிகள், "பி" அந்தஸ்தை பெற்றுள்ளன. இதில், 24 கல்லூரிகள் முதல் முறையாக, "நாக்" குழுவின் அந்தஸ்தை பெற்றுள்ளன. "சி" அந்தஸ்தை, புதுக்கோட்டை, வெங்கடேஸ்வரா கல்லூரி மட்டும் பெற்றுள்ளது.

    கோவை மாவட்டத்தை சேர்ந்த, ஆறு கல்லூரிகள், "ஏ" அந்தஸ்து பெற்றுள்ளன. இதில், கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியும் ஒன்று.

    தேசிய தர நிர்ணய கழகத்தால், சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு "பி++" அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, "ஏ" அந்தஸ்தை பெற்றுள்ளது. பல்வேறு நிர்வாக குளறுபடிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என, கடந்த இரு ஆண்டுகளாக கலகலத்துப் போயிருந்த, சென்னை பச்சயைப்பன் கல்லூரி, "ஏ" கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments: