Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 5, 2013

    மேலூரில் 2 பள்ளிகள் தரம் உயர்வு

    சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி பேசுகையில், "மேலூர் தொகுதி, மங்களாம்பட்டி, பள்ளப்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுமா" என்றார்.
    இதற்கு பதில் அளித்து அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: மதுரை, மேலூரில், தெற்குத் தெரு மற்றும் தும்பைப்பட்டி ஆகிய இரு அரசு உயர்நிலைப் பள்ளிகள், 2012-13ம் கல்வியாண்டில், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு உள்ளது.

     மற்ற இரு பள்ளிகளை தரம் உயர்த்த, அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படவில்லை. இத்தொகையை வழங்கினால், 2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    No comments: