Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 18, 2015

    ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும்

    அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நியமனம் செய்ய வேண்டும் என்று  அன்புமணி வலியுறுத்தினார்.இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் நியமனம் நேர்முகத் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


    இது, கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறானது. கண்டனத்துக்குரியது.இந்த முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நேர்காணலில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆய்வக உதவியாளர்களை பணி நியமனம் செய்வோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.எனவே, ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆய்வக உதவியாளர்களைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    No comments: