Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 2, 2015

    'சஸ்பெண்ட்' ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை:கிடப்புக்கு போனது 'வாட்ஸ் அப்' வழக்கு

    பிளஸ் 2 தேர்வின் போது, 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, இரண்டு பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும், 'பிட்' பிரச்னையில் சிக்கிய ஐந்து ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு, திரும்பப் பெறப்பட்டுள்ளது; ஏழு பேரும் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.


    தேர்வு மையம்:பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, ஓசூர் தனியார் பள்ளி தேர்வு மையத்தில், கண்காணிப்புப் பணியில் இருந்த ஆசிரியர்கள், மகேந்திரன், கோவிந்தன், மொபைல் போன், 'வாட்ஸ் அப்' மூலம் வினாத்தாளை பகிர்ந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு ஆசிரியர்களை கைது செய்தனர். இந்த விவகாரத்தில், ஓசூர் மாவட்டக் கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஓசூர் கல்வி அலுவலக ஊழியர்கள் சந்திரசேகர், ரமணா, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.'வாட்ஸ் அப்' விவகாரத்தைத் தொடர்ந்து, தேர்வு அறைகளில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது மாணவர்களிடம், 'பிட்' பிடிபட்டதால், கண்காணிப்புப் பணியில் இருந்த, தேனி மாவட்டம், வைகை அணை அரசு பள்ளி ஆசிரியர் செல்வன், வடுகப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் வடிவேல், லட்சுமி நாராயணன், தஞ்சை மற்றும் நாகையில் தலா, ஒரு ஆசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    பள்ளிக்கல்வி அலுவலர்களும் தேர்வுத்துறை இயக்குனரை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
    இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு நேற்று துவங்கிய நிலையில், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் அசோக்குமார், தேனி மாவட்ட ஆசிரியர்கள் செல்வன், வடிவேல், லட்சுமி நாராயணன் மற்றும் தஞ்சை, நாகை மாவட்ட, இரண்டு ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு விலக்கப்பட்டுள்ளது.

    வழக்கம் போல்:ஆசிரியர்கள் அனைவரும் வழக்கம்போல், நேற்று மீண்டும் பணிக்கு சென்றனர். பள்ளிக்கல்வி அலுவலர்களும் தங்கள் பணிகளில் சேர்ந்து விட்டதாக, தெரிவித்தனர்.

    No comments: