
மாடித் தோட்டம் அமைத்துள்ள, காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை எழிலரசி கூறியதாவது: கடந்தாண்டு கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தவரை, அவரை, தக்காளி, பச்சை மிளகாய், அரைக்கீரை நட்டோம். கத்தரியில் மட்டும் பத்து கிலோ வரை காய்கள் பறித்தோம். ஆறாம் வகுப்பு மாணவிகள், என்.எஸ்.எஸ்., மாணவிகள் மூலம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். காய்கள் பறிப்பதும் மாணவிகள் தான்.
இயற்கையாகவே நெல்லை விளைவித்து பயிற்சி அளிக்கிறோம். விளையும் நெல்லை மாணவிகள் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். தற்போது தான் பள்ளி துவங்கியுள்ளது. இன்னும் ஒருவாரத்தில் விதைகள் வாங்கி மறுபடியும் தோட்டம் அமைப்போம் என்றார்.
No comments:
Post a Comment