Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 10, 2015

    7 ஆயிரம் நர்ஸ் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

    அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள, 7,000 நர்ஸ்கள் இடத்திற்கு, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு, வரும் 28ம் தேதி நடக்கிறது.


    அரசு மருத்துவமனையில், டாக்டர் பற்றாக்குறை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 2,176 டாக்டர்கள் தேர்வு செய்யப் பட்டனர். தொடர்ந்து, ’நேரில் வந்தால் போதும்; தேர்வு’ என்ற அடிப்படையில், எந்த தேர்வுமின்றி, 400 எம்.எஸ்., - எம்.டி., முடித்த சிறப்பு பிரிவு டாக்டர்கள் சேர்க்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து, 451 ஆண் நர்ஸ்கள் உட்பட, 7,243 நர்ஸ்களை, தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்க்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, ’ஆன் லைன்’ வழியே விண்ணப்பிக்க வேண்டும். 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், ஐந்தில், ஒருவருக்கு தான் பணி கிடைக்க உள்ளது.  

    இதற்கு தகுதியானோர் யார் என்பதற்கான எழுத்துத் தேர்வு, இம்மாதம், 28ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், முதன் முறையாக, நர்ஸ் பணிக்கு, அரசு தகுதித் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    No comments: