Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 5, 2015

    சட்டப் படிப்பு: இன்று முதல் விண்ணப்ப விநியோகம்: 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு வயது உச்ச வரம்பு நீக்கம்

    ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


    சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் முன்னர் அறிவித்திருந்தது. ஆனால், அதன்படி விநியோகிக்கப்படவில்லை.

    படிப்புக்கான வயது உச்ச வரம்பு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, சட்டப் படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் இந்திய பார் கவுன்சிலின் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில், தமிழகத்திலும் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதன் காரணமாகவே விண்ணப்ப விநியோகம் தடைபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.


    இந்த நிலையில் வயது உச்ச வரம்பை நீக்குவதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க சட்டப் பல்கைலக்கழகம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

    பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகள், மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

    பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.எல்., முதுநிலை சட்ட பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.

    அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்படும். மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.

     கட்டுப்பாடு நீக்கம்: தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில் மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 என்று முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு 20-லிருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஓராண்டு மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    No comments: