Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 5, 2015

    'குரூப் - 1' தேர்வில் மாற்றுத் திறனாளிக்கு கூடுதல் நேரம் வழங்க உத்தரவு

    குரூப் - 1' பிரதான தேர்வில், மாற்றுத்திறனாளிக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்; மாற்றுத்திறனாளி. அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த இவர், எம்.எஸ்சி., முடித்துள்ளார். குரூப் - 1 தேர்வுக்கு, 2013ல் விண்ணப்பித்தார்; முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

    கூடுதல் நேரம் :பிரதான தேர்வு, ஜூன், 5 முதல், 7ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வில், கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரமேஷ் தாக்கல் செய்த மனு:
    குரூப் - 1 பிரதான தேர்வில், ஆறு பாடங்கள் எழுத வேண்டும். ஒவ்வொன்றுக்கும், மூன்று மணி நேரம் ஒதுக்கப்படும். என்னால், மூன்று மணி நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க முடியாது; கூடுதல் நேரம் வேண்டும்.

    கடந்த, 1993ல், சமூகநலத் துறை பிறப்பித்த அரசாணையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுத்துத் தேர்வில், ஒரு மணி நேரம் வரை கூடுதலாக பெற உரிமை உள்ளது.
    கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, கடந்த ஏப்ரலில் மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பிரதான தேர்வில் கூடுதல் நேரம் ஒதுக்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
    இம்மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.முருகேசன், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வழக்கறிஞர் நிறைமதி ஆகியோர் ஆஜராகினர்.

    மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:கடந்த 1993ல், சமூகநலத் துறை பிறப்பித்த உத்தரவில், மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒரு மணி நேரத்திற்கு மிகாமல், கூடுதல் நேரம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.எதிர்பார்க்கவில்லை அவ்வாறு இருக்கும்போது கூடுதலாக, 30 நிமிடங்கள் வழங்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., கூறுவதை எதிர்பார்க்கவில்லை. எனவே, சமூகநலத் துறை பிறப்பித்த அரசாணையின்படி, மாற்றுத்திறனாளியான மனுதாரருக்கு, குரூப் - 1 தேர்வு எழுத, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும்.
    இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

    No comments: