Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 15, 2014

    பொது அறிவு செய்திகள்

    Posted: 14 Sep 2014 09:29 AM PDT
    மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...
    இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.



    சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள்.

    ‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற... வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும். கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40 ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது, எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது... இதுதான் வேலை. கடலாறு மாதம், நாடாறு மாதம்!’’ - மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.

    இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா, நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.
    “வேலைக்குச் சேர்ந்து ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம். எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும் இல்லாத வேலை. தினமும் அதே கடல்... அதே கப்பல்... அதே எஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும் மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்... இதே கடல் தான்... இதே எஞ்சின்தான்... கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு...
    ஒருமுறை முத்துப்பட்டிக்கு வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன். கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான் மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன் இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது?
    செயல்ல இறங்கிட்டேன். முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன். சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே. அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.
    கடுகுல இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும். அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.
    முதலில் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து வைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம் செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள் அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல் கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.

    வெறும் வறட்டு வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள் செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால் போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு!’’ - மகிழ்கிறார் ரூசோ.

    இப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம் அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

    ‘‘இப்போ நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன். தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு...’’
    உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ!

    நன்றி :- தினகரன் கட்டுரை
    Posted: 14 Sep 2014 01:27 AM PDT
    குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

    சத்குரு:
    குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

    இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.
    நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.
    ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.
    ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?
    இப்படித்தான் குண்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.
    அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.
    முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!
    Posted: 14 Sep 2014 01:22 AM PDT

    1 பைட்(1 byte ) = 8 பிட்ஸ்(bits( 0 & 1's))
    ஒரு கிலோ பைட் ( 1 KiloByte)= 1,024 பைட்ஸ்(1024 bytes)
    ஒரு மெகா பைட் (1 megabyte)=1,024 கிலோ பைட்ஸ்(1024 KB)
    ஒரு கிகா பைட் (1 gigabyte)=1,024 மெகா பைட்ஸ்( 1024 MB)
    ஒரு டெரா பைட் (1 terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்(1024 GB)
    ஒரு பெட்டா பைட் (1 petta byte) = 1,024 டெரா பைட்ஸ்(1024 TB)
    ஒரு எக்ஸா பைட் (1 exa byte)=1,024 பெட்டா பைட்ஸ் (1024 PB)
    ஒரு ஸெட்டா பைட் (1 zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்(1024 EB)
    ஒரு யோட்டா பைட் (1 yotta byte(YB)) = 1,024 ஸெட்டா பைட்ஸ்( 1024 ZB)
    எந்திரனில் ரஜினி ரோபோ 1 ஸெட்டா பைட் மெமரியை கொண்டுள்ளதாக காட்டப்பட்டது..அதையும் தாண்டி யோட்டோபைட் உள்ளது.

    Posted: 13 Sep 2014 08:49 PM PDT
    தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம். சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.

    ஆபரேஷன் முடிந்து ஓரிரு நாட்களில், நீங்கள் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. உணவில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் இருக்கட்டும்.

    நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். காரணம், கர்ப்ப காலத்தின்போது உடல் எடை கூடியிருக்கும். அதைக் குறைப்பதற்கு இந்தக் கொழுப்பு உணவுகள் எந்தவகையிலும் உதவாது.

    ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். அதே போல் தாம்பத்திய உறவையும் ஆறு வாரங்களுக்குத் தவிர்த்து விடுங்கள்.

    நான்கிலிருந்து ஆறுவாரங்களுக்குப் பிறகு, அடிவயிற்றுத் தசைகளுக்கான உடற் பயிற்சிகளைத் தொடக்கலாம். தவிர சிசேரியனுக்குப் பிறகு வேறென்ன செய்ய வேண்டும்… எப்போதெல்லாம் பரிசோதனைக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

    சிசேரியனால் ஆபத்து உண்டா?

    பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

    ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன
    Posted: 13 Sep 2014 08:46 PM PDT
    வலிக்குப் பயந்து கொண்டு நிறைய பெண்களும், பணத்துக்கும் ஆசைப்பட்டுக் கொண்டு மருத்துவர்களும் இப்போதெல்லாம் சுகப்பிரசவங்களை மறந்து, சிசேரியனையே விரும்புகிறார்கள் என்றொரு பொதுவான கருத்து உண்டு. ஆனால், பலரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல சிசேரியன் என்பது அத்தனை சுலபமானதல்ல. சிசேரியன் ஆன பிறகு, நீண்ட கால பாதிப்புகளாக சில பிரச்னைகள் தலைதூக்கலாம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

    ‘‘சிசேரியன் என்பது கர்ப்பப் பையின் கீழ் பகுதியிலிருந்து, வயிற்றைத் திறந்து, குழந்தையை வெளியே எடுக்கும் ஒரு முறை என்பதால், அது மிக மிக ஜாக்கிரதையாக செய்யப்பட வேண்டும். கர்ப்பப் பையைத் திறக்கும் போது, அது, சிறுநீர்ப் பையுடன் ஒட்டிக் கொள்ளலாம். சினைக்குழாயானது கர்ப்பப் பை அல்லது சினைப் பையுடன் ஒட்டிக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்த தழும்புடன் கூட ஒட்டிக் கொள்ளலாம்.

    இப்படி எங்கே, எப்படி ஒட்டிக் கொள்கிறது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும் வேறுபடும். உதாரணத்துக்கு சிறுநீர் பையுடன் ஒட்டினால், மாதவிலக்கு நாள்களில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமங்கள் வரும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வோ, சிறுநீர் கழிக்கும் போது வலியோ வரலாம். கர்ப்பப் பையும், குடலும் கூட சில நேரங்களில் ஒட்டிக் கொள்ளலாம். அப்படி ஒட்டினால், சாப்பிட்டதும், வயிறு உப்பினமாதிரி தோன்றும்.

    இயற்கை உபாதைகளை வெளியேற்ற பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியிருக்கலாம். கழிவறைக்குச் செல்வதற்கு முன்பும், சென்று வந்த பிறகும் சிரமம் இருக்கலாம். ஒரு பட்டை மாதிரி போய் குடலைச் சுற்றி ஒட்டிக் கொள்வதால், அடிக்கடி வாந்தி எடுக்கும் உணர்வு, வயிறு வீக்கம் போன்றவையும் சகஜமாக வரலாம். சினைக்குழாயும், கர்ப்பப் பை அல்லது சினைப்பையும் ஒட்டிக் கொள்வதால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருக்கலாம்.

    இன்டர்னல் ஹெர்னியா என்கிற பிரச்னைக்கும் இதெல்லாம் வழி வகுக்கலாம். அது அவசரகால சிகிச்சையாக கவனிக்கப்பட வேண்டியது. அறுவை சிகிச்சை ஒன்றுதான் அதற்கு வழி. முன்பெல்லாம் வயிற்றின் குறுக்கே நேர்க்கோடாகக் கிழித்துதான் சிசேரியன் செய்யப்பட்டது. அந்த மாதிரி அறுவை சிகிச்சைகளில் இந்தப் பிரச்னைகள் அதிகம் இருந்தன. இப்போது, வயிற்றின் அடிப்பகுதியில் கிழித்து செய்யப்படுகிற அறுவை சிகிச்சைதான் அதிகம்.

    ஆனாலும் கிராமங்களிலும், மருத்துவ வசதி இல்லாத சிறிய ஊர்களிலும் இன்னமும் பழைய முறை பழக்கத்தில் இருக்கிறது. கர்ப்பப் பையே, வயிற்றுடன் ஒட்டிக் கொள்வது, அதன் விளைவாக வயிற்றைத் தொட்டாலே வலி ஏற்படுவது, தாம்பத்ய உறவின் போது வலி என பலவித சிக்கல்களுக்கு இது காரணமாகலாம். இந்தப் பிரச்னைகளை ஸ்கேன் உள்பட எந்த சோதனைகளின் மூலமும் அத்தனை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது.

    பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்துதான் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி பிரச்னைகள் இருப்பது உறுதியானால்,  ஒட்டிக் கொண்ட பகுதிகளை லேப்ராஸ்கோப்பி மூலம் பார்த்து, சுத்தப்படுத்தி, மறுபடி ஒட்டாமலிருக்க செலுலோஸால் ஆன வலை மாதிரியான ஒன்றைத் தடையாகப் பொருத்தி விடுவோம். எனவே சிசேரியன் செய்தவர்கள், அதற்கு சம்பந்தமே இல்லாமல் இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

    - ஆர்.வைதேகி
    நன்றி வசந்தம்
    Posted: 13 Sep 2014 08:43 PM PDT
    கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து ம் கிருமிகளும் பாக்டீரியாக்க‌ளும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    மீன்கள்: ஆற்று மீன்களையோ குளத்து மீன்களையோ அல்ல‍து ஐஸ் வைத்த‍ பதப்படுத்த‍ப்பட்ட‍ மீன்க ளை யோ சாப்பிடக்கூடாது. கர்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கர்பநேரத்தில் அவர்களது உடலில் இருக்கவே ண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.

    அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்க‍ப்பட்ட‍ உண வுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்ப‍தால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப்படுவதால், கருச் சிதை வும் ஏற்படும் அபாயம் உண்டு.

    துரித உணவு மற்றும் பதப்படுத்த‍ப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்க‍ப்படும் உண்வு வகைகளையும் பதப்படுத்த‍ப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்க‍ப்பட்டுள் ள‍ பால் பொரு ட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.

    ப‌ழங்கள்

    அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப் பழம் ஆகிய இர ண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள‍ வெப்ப‍த்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணாகி விடும்.

    காய்கறிகள்

    சுத்தம் செய்ய‍ப்பட்ட‍ காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவியபின் சமையலுக்கு பயன்படுத்த‍லம்) சமைத்து உண்ண‍ வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும்.

    பதப்படுத்த‍ப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்க‍கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
    Posted: 13 Sep 2014 08:27 PM PDT


    தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

    அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

    அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறையில் குணமாக்குங்கள்.

    கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

    கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

    வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

    ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

    யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

    தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

    சூடான பால் அருந்துதல் :

    சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

    பட்டையை அரைத்துத் தடவுதல் :

    தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

    மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :

    சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

    சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :

    சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

    தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

    நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

    சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :

    சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

    கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :

    ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.
    சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

    ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :

    காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

    பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

    தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

    இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :

    தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :

    வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

    சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :

    தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

    நன்றாக தூங்குதல் :

    பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.
    இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.
    Posted: 13 Sep 2014 08:13 PM PDT
    இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள்!!!
    ---------------------------------------------------------------------
    இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ,அமைப்புகள் ,தொழிற்சாலைகள்
    ஆகியவற்றின் இலவச எண்கள் நான் பார்த்தது நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் .
    குறிப்பாக வங்கிகள் , விமானங்கள் ,மொபைல் நிறுவனங்கள் ,கம்ப்யூட்டர் ஐ.டி கஸ்டமர் சேவை ,கோரியர்ஸ் ,நலபிரிவு ,கல்வி நிறுவனங்கள் ,உணவு விடுதிகள் , பயண முன் பதிவு போன்ற இலவச தொலைபேசி எண்கள் கீழே ....

    Airways Toll Free Numbers

    Air India / Indian Airlines 1800 180 1407
    Jet Airways 1800 22 55 22
    SpiceJet 1800 180 3333
    Automobiles “1-800″ Numbers
    Mahindra Scorpio 1800 22 6006
    Maruti 1800 111 515
    Tata Motors 1800 22 5552
    Windshield Experts 1800 11 3636

    Banks Toll Free Customer Care

    ABN AMRO 1800 11 2224
    Axis Bank 1860 425 8888
    Canara Bank 1800 44 6000
    Citibank 1800 44 2265
    Corporatin Bank 1800 443 555
    Development Credit Bank 1800 22 5769
    HDFC Bank 1800 227 227
    ICICI Bank 1800 333 499
    ICICI Bank NRI 1800 22 4848
    IDBI Bank 1800 11 6999
    Indian Bank 1800 425 1400
    ING Vysya 1800 44 9900
    Kotak Mahindra Bank 1800 22 6022
    Lord Krishna Bank 1800 11 2300
    Punjab National Bank 1800 180 2222,1800 122 222
    State Bank of India 1800 233 7933,1800 44 1955
    Syndicate Bank 1800 44 6655

    Mobile Phone Companies Customer Service Numbers

    BenQ 1800 22 08 08
    Bird CellPhones 1800 11 7700
    Motorola Customer Care number 1800 3000 4343
    Motorola MotoAssist 1800 11 1211
    Nokia 1800 425 3388
    Samsung 1800 110011
    Sony Ericsson 3901 1111

    Computers/IT Customer Care

    Adrenalin 1800 444 445
    AMD 1800 425 6664
    Apple Computers 1800 444 683
    Canon 1800 333 366
    Cisco Systems 1800 221 777
    Compaq / HP 1800 425 4999,
    1800 112 267,
    1800 444 999
    Data One Broadband 1800 424 1800
    Dell 1800 425 9046
    1800 444 026
    Epson 1800 44 0011
    eSys 3970 0011
    Genesis Tally Academy 1800 444 888
    HP 1800112267
    HCL 1800 180 8080
    IBM 1800 443 333
    Lexmark 1800 22 4477
    Marshal’s Point 1800 33 4488
    Microsoft 1800 111 100
    Microsoft Virus Update 1901 333 334
    Quickheal 18002333733
    Seagate 1800 180 1104
    Symantec 1800 44 5533
    TVS Electronics 1800 444 566
    WeP Peripherals 1800 44 6446
    Wipro 1600 345 3456,
    1800 200 3456,
    1800 333 312
    xerox 1800 180 1225
    Zenith 1800 222 004

    Couriers/Packers & Movers

    ABT Courier 1800 44 8585
    AFL Wizz 1800 22 9696
    Agarwal Packers & Movers 1800 11 4321
    Associated Packers P Ltd 1800 21 4560
    DHL 1800 111 345
    FedEx 1800 22 6161
    Goel Packers & Movers 1800 11 3456
    UPS 1800 22 7171

    Education

    Edu Plus 1800 444 000
    Hindustan College 1800 33 4438
    NCERT 1800 11 1265
    Vellore Institute of Technology 1800 441 555

    Healthcare

    Best on Health 1800 11 8899
    Dr Batras 1800 11 6767
    GlaxoSmithKline 1800 22 8797
    Johnson & Johnson 1800 22 8111
    Kaya Skin Clinic 1800 22 5292
    LifeCell 1800 44 5323
    Manmar Technologies 1800 33 4420
    Pfizer 1800 442 442
    Roche Accu-Chek 1800 11 45 46
    Rudraksha 1800 21 4708
    Varilux Lenses 1800 44 8383
    VLCC 1800 33 1262

    Home Appliances

    Haier 1800 200 9999
    Aiwa/Sony 1800 11 1188
    Anchor Switches 1800 22 7979
    Big TV 1800 200 9001
    Blue Star 1800 22 2200
    Bose Audio 1800 11 2673
    Bru Coffee Vending Machines 1800 44 7171
    Daikin Air Conditioners 1800 444 222
    DishTV 1860 180 3474,
    1800 12 3474
    Electrolux 1860 200 1212,
    MTNL / BSNL Users dial – (0124/022) 33001212
    Faber Chimneys 1800 21 4595
    Godrej 1800 22 5511
    Grundfos Pumps 1800 33 4555
    IFB 1800 425 5678 (For BSNL and MTNL)
    Kelvinator 800 419 4040
    Kenstar 1800 419 40 40
    LG 1800 180 9999
    ONIDA 1800 300 99000
    Philips 18601801111
    1800 22 4422
    Philips (LCD, LED, TFT) 18004256396
    Samsung 1800 113 444
    Sanyo 1800 11 0101
    Sharp 1800 4254 322
    Sony 1800 103 7799
    TCL 1800 102 5060
    Voltas 1800 33 4546
    WorldSpace Satellite Radio 1800 44 5432

    Hotel Reservations

    GRT Grand 1800 44 5500
    InterContinental Hotels Group 1800 111 000
    Marriott 1800 22 0044
    Sarovar Park Plaza 1800 111 222
    Taj Holidays 1800 111 825

    Insurance

    AMP Sanmar 1800 44 2200
    Aviva 1800 33 2244
    Bajaj Allianz 1800 22 5858
    Chola MS General Insurance 1800 44 5544
    HDFC Standard Life 1800 227 227
    LIC 1800 22 4077,
    1800 33 4433
    Max New York Life 1800 33 5577
    Royal Sundaram 1800 33 8899
    SBI Life Insurance 1800 22 9090
    Mattresses
    Kurl-on 1800 44 0404
    Sleepwell 1800 11 2266

    Investments/Finance

    CAMS 1800 44 2267
    Chola Mutual Fund 1800 22 2300
    Fidelity Investments 1800 180 8000
    Franklin Templeton Fund 1800 425 4255
    J M Morgan Stanley 1800 22 0004
    Kotak Mutual Fund 1800 222 626
    LIC Housing Finance 1800 44 0005
    SBI Mutual Fund 1800 22 3040
    Sharekhan 1800 22 7500
    Tata Mutual Fund 1800 22 0101

    Paints

    Asian Paints Home Solutions 1800 22 5678
    Berger Paints Home Decor 1800 33 8800
    Teleshopping
    Asian Sky Shop 1800 22 1800
    Jaipan Teleshoppe 1800 11 5225
    Tele Brands 1800 11 8000
    VMI Teleshopping 1800 447 777
    WWS Teleshopping 1800 220 777
    Travel
    Club Mahindra Holidays 1800 33 4539
    Cox & Kings 1800 22 1235
    God TV Tours 1800 442 777
    Kerala Tourism 1800 444 747
    Kumarakom Lake Resort 1800 44 5030
    Raj Travels & Tours 1800 22 9900
    Sita Tours 1800 111 911
    SOTC Tours 1800 22 3344

    UPS

    APC 1800 44 4272
    Numeric 1800 44 3266

    Others

    Consumer Helpline 1800 11 4000
    L’Oreal, GARNIeR 1800 223 000
    KONE Elevator 1800 444 666
    Indane 1800 44 51 15
    Aavin 1800 44 3300
    Pedigree 1800 11 2121
    Kodak India 1800 22 8877
    Domino’s Pizza 1800 111 123
    World Vision India 1800 444 550
    Telecom Monitoring Cell 1800 110 420
    Bsnl(cdma) 1800 233 1500
    Bsnl 1800 180 1800


    NOTE: - இதில் உள்ள சில எண்கள் வேலை செய்யவில்லை என்றால்நான் பொறுப்பல்ல அந்த நிறுவனங்களே பொறுப்பு ...
    Posted: 12 Sep 2014 09:25 AM PDT
    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பொது தகவல் அலுவலருக்கு தகுந்த புரிதல் இல்லாததால் அரசுக்கு பல ஆயிரங்கள் இழப்பு....

    பொதஅ, மனுதாரர் கோரிய ஆவணங்களை 30 நாட்களுக்குள் வழங்கவேண்டும் இல்லையெனில் அவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.
    உதரணமாக, நீங்கள் அனுப்பிய மனு ஒரு அலுவலகத்தை 1ம் தேதி அடைகிறது என்று வைத்து கொள்வோம். அதற்கு பொதஅ உங்களுக்கு 5ம்தேதி கடிதம் மூலமாக, தாங்கள் கோரிய அனைத்து ஆவணங்களுக்கும் கட்டணமாக ரூ.20 செலுத்த சொல்கிறார் என்றால், தகவல்களை பெறுவதற்கான உங்கள் 30 நாட்களுக்கான கால அளவில் 5 நாட்கள் முடிந்து விடுகின்றது. அதாவது, பொதஅ உங்களுக்கு கடிதம் எழுதிய நாளில் 30 நாட்களுக்கான கடிகாரம் நின்று விடுகின்றது. அதன் பின்னர் எப்போது நீங்கள் கட்டணத்தை பொதஅ-க்கு அனுப்பி வைக்கிறிர்களோ, அன்றிலிருந்து கடிகாரம் திரும்பவும் ஓட ஆரம்பிக்கும்.

    நீங்கள் கட்டணத்தை அவர்கள் அலுவலகத்தில் (எந்த வகையிலாவது) 15ம் தேதி செலுத்துகிறீர்கள் என்றால், பொதஅ-க்கான கால அளவு 15ம் தேதியில் இருந்து ஓட ஆரம்பிக்கும். ஆகவே பொதஅ அடுத்தமாதம் 10ம்தேதிவரை தங்களுக்கு ஆவணங்களை அனுப்ப கால அவகாசம் எடுத்து கொள்ளலாம்.
    ஆனால், பொதஅ அனைவருக்கும் மறக்காமல் தெரிந்த ஒரு விஷயம் பதில் அனுப்ப 30 நாட்கள் எடுத்து கொள்ளலாம் என்பதுதான். அதையோ, ஆவணங்களை கேட்கும்போதும், ஆவணங்களுக்கான கட்டண விபரத்தை அறிவிக்ககூட 30 நாட்கள் கழித்துதான் பதில் எழுதுகிறார்கள். இந்நிலையில், 30 நாட்களுக்கான அவர்களுக்கு கிடைக்கும் கால அவகாசத்தை அந்த பதில் எழுதும்போதே, அவர்கள்பூர்த்தி செய்துவிடுவதால், மனுதாரர் அதற்கு பின் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    மனுதாரர் எழுதிய மனுவிற்கு, 30 நாட்கள் கழித்து ஒரு பொதஅ கொடுத்த பதிலை கீழே கொடுத்துள்ளேன்.

    “According to RTI Act, if you are willing to get the information, you shall pay a sum of Rs.2 per page. I am therefore request to remit the amount of Rs.80 to Government account and send the remittance challan in original for furnishing information sought for by you under RTI Act, 2005.

    இதற்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கப்பட்டது.

    As per the Act, the information must be furnished at free of cost if the same is not supplied within 30 days. Hence, if you still insist me to pay the additional charges of Rs.80/-, then I have no other alternative except to honour your instructions with protest and liberty to take up the issue for Appeals (u/s 19(1) - First Appeal before the First Appellate Authority, u/s 19(3) - Second Appeal before Tamil Nadu State Information Commission) and thereafter, if necessary, before the Honourable High Court of Madras, Madurai Bench for issuing Writ of Mandamus, for refund of the said charges.

    உடனடியாக, அனைத்து ஆவணங்களையும் இலவசமாக அனுப்பி வைத்தார்கள்.

    ஆவணங்கள் கைவசம் இருக்கும் நிலையில், அதற்கான கட்டண அறிவிப்பை 30 நாட்களுக்குள் அனுப்பி வைத்திருந்தால், அரசாங்கத்திற்கு ரூ.80 கிடைத்திருக்கும் அல்லவா?

    தஅஉ சட்டத்திற்காக ஒவ்வொரு அரசு துறையிலும் ஏற்படும் செலவினங்கள், தணிக்கை செய்யப்படுகின்றதா என்பது தெரியவில்லை. அந்த பொதஅ-ரிடம் இருந்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூல் செய்யும் பட்சத்தில், ஆவணங்களுக்கு கட்டண அறிவிப்பை அனுப்ப 30 நாட்கள் பொதஅ எடுத்து கொள்ளமாட்டார் அல்லவா? அரசுக்கு இந்த வகையில் ஏற்படும் பல ஆயிரம் இழப்பை தவிர்க்கலாமே?
    Posted: 11 Sep 2014 01:34 AM PDT

    அரசாங்க மக்கள் சாசனத்தில் அத்தியாவசியம் பெறக்கூடியதாக 150 சேவைகள் இடம் பெற்றுள்ளது.

     அதை அதிகாரிகள் செய்தே தரவேண்டியதற்கான காலவரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     

    அதாவது உதாரணமாக குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ரேசன் கார்டு குறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி பதில் தர வேண்டும். பதில் சரியானதாக இல்லாத பட்சத்தில் இரண்டாம் நிலை அதிகாரி முதலாவது அதிகாரிக்கு காலதாமதம் செய்த ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.250 அபராதம் விதித்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க இந்த சேவை உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. இவ்வாறு மொத்தம் 11 துறைகள் இதற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் 150 சேவைகளுக்கு மக்கள் சாசனத்தில் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது.

     ஆர்.டி.ஓவில் பழகுநர், ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு என்பது ஒரு நாளில் வழங்கப்பட வேண்டும் என்பது சேவை உரிமையில் உள்ளது. அப்படி வழங்காத அலுவலர் மீது ஒரு குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

    மார்ச் 2010-ம் ஆண்டு மார்ச் 7 அன்று இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. உடனடியாக மத்திய பிரதேசமும், அதைத் தொடர்ந்து பீகார்,உ.பி, ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திராஞ்சல், இமாச்சல்பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 19 மாநிலங்களில் இது அமலுக்கு வந்துள்ளது!’’
    Posted: 09 Sep 2014 12:23 PM PDT
    சித்தர்கள் நமக்களித்த மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பெயர்களும், அதன் பயன்களும்..!

    *அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

    *நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

    *கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

    *வில்வம் பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

    *அமுக்கலா பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

    *சிறுகுறிஞான் பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

    *நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

    *வல்லாரை பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

    *தூதுவளை பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

    *துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

    *ஆவரம்பூ பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

    *கண்டங்கத்திரி பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

    *ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

    *ஓரிதழ் தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

    *ஜாதிக்காய் பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

    *திப்பிலி பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

    *வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

    *நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

    *நாயுருவி பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

    *கறிவேப்பிலை பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

    *வேப்பிலை பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

    *திரிபலா பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

    *அதிமதுரம் பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

    *துத்தி இலை பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

    *செம்பருத்திபூ பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

    *கரிசலாங்கண்ணி பொடி:- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

    *சிறியாநங்கை பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

    *கீழாநெல்லி பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

    *முடக்கத்தான் பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

    *கோரைகிழங்கு பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

    *குப்பைமேனி பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

    *பொன்னாங்கண்ணி பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

    *முருஙகைவிதை பொடி:- ஆண்மை சக்தி கூடும்.

    *லவங்கபட்டை பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

    *வாதநாராயணன் பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

    *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

    *வாழைத்தண்டு பொடி:- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

    *மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

    *சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

    *பொடுதலை பொடி:- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

    *சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

    *ஆடாதொடை பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

    *கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

    *வெட்டி வேர் பொடி:- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

    *வெள்ளருக்கு பொடி:- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

    *நன்னாரி பொடி:- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

    *நெருஞ்சில் பொடி:- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

    No comments: