1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும் நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
5) இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
6) வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
7) தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
8) விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
9) வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
10) புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்
மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24%
இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பாடபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.
நம்முடன் நாம்.....
இரா.சங்கீதா சங்கரானந்தம்
No comments:
Post a Comment