Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 1, 2014

    "விண்வெளி ஆய்வில் இந்தியா சளைத்தது அல்ல"

    கோபி, மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு குறித்த கருத்தரங்கில், திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ., விண்கல ஏவுகணை வடிவமைப்பு இணை இயக்குனர் முத்துக்குமார் பேசியதாவது:

    கடந்த, ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., செயற்கைகோள், இஸ்ரோவின், 13 ஆண்டு உழைப்பின் மூலம் சாத்தியமானது. இத்தகைய வசதி, இந்தியாவை தவிர, அமெரிக்க, ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இது முற்றிலும் உள்நாட்டு கிரையோஜெனிக் என்ஜின் தொழில் நுட்பத்துடன் துவங்கப்பட்டது.

    தற்போது ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 என்ற செயற்கைகோள் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. பரிசார்த்த முறையில், வரும் அக்டோபரில் விண்ணில் ஏவப்படும். ராக்கெட் தயாரிக்க, அதன் தன்மைக்கேற்ப செலவினங்கள் ஏற்படும். செயற்கை கோள் உருவாக்க, 500 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. விண்வெளி ஆய்வை, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும், உலக நாடுகள் பயன்படுத்தி கொண்டிருக்கையில், சமுதாய நன்மைக்காக மட்டுமே விண்வெளி ஆய்வில் இந்தியா ஈடுபடுகிறது.

    தொலை தொடர்பு துறையிலும், இயற்கை வளங்களை கண்டறிவதிலும், வங்கி சேவை, அரசு நிர்வாகம் ஆகியவற்றிலும், நாட்டின் செயற்கை கோள்களின் பங்கு மகத்தானது. விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில், நமது விஞ்ஞானிகள் எவ்விதத்ததிலும் இளைத்தவர்கள் அல்ல என்பதை, அவ்வப்போது ஏவப்படும் விண்கலங்களும், செயற்கை கோள்களும் நிரூபித்துள்ளன.

    மாணவர் சமுதாயம், இந்தியா மேற்கொண்டுள்ள சவால்களையும், சாதனைகளையும் புரிந்து கொண்டு, நல்ல முறையில் கல்வி பயின்று, எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த ஒரு நாடாக உருவாக வேண்டும் என்றார். பள்ளி தாளாளர் பெருமாள்சாமி, செயலாளர் சீதாலட்சுமி, முதல்வர் இளமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    No comments: