கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு, 2012 டிசம்பர் 9ம் தேதி நடந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கூட்டுறவு மாநில ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு, பணியாளர்களை தேர்வுசெய்ய, 2012 டிசம்பர் 9ம் தேதி, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில், எழுத்து தேர்வில் பெறப்பட்ட, மதிப்பெண் அடிப்படையில், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, விண்ணப்பதாரர் பட்டியல்; வகுப்பு வாரியான குறைந்தபட்ச மதிப்பெண்; தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், நேர்முகத் தேர்வு அட்டவணை, ஆகியவை, http;//www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment