Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 19, 2014

    கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம் 'தினமலர்' செய்தி எதிரொலி

    மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல் நடந்தது.அப்போது மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்' அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.இக்கூடுதல் இடங்களில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். மதுரையில் 29 ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் பணியில் சேர்ந்த பின், நிதித்துறை ஒப்புதல் கிடைக்காததால், ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    1 comment:

    Unknown said...

    இடைநிலை ஆசிரியர்களுக்கு ..

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி தனது கருத்துக்களை 5 நிமிடங்களில் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அனைவரது பதிவும் குறுந்தகடுகள் மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துடன் பதினைந்து பக்க அளவுள்ள கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.
    நமக்காக யாரும் போராட வர மாட்டார்கள். நாம்தான் முன்வரவேண்டும். தயக்கம் வேண்டாம் ஆசிரிய நண்பர்களே. .
    எத்தகைய முக்கியமான வேலை இருந்தாலும் ஒரு நாள் மட்டும் சென்னை வந்து நம் கோரிக்கையை வலுப்படுத்துங்கள். நிச்சயம் கூடுதல் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை பெற முடியும். .
    இது வே கடைசி முயற்சி, பின்னர் all educational website க்கும் நன்றி கூறி விடைபெறுவோம்.
    ஆதரவு அளித்த அனைத்து இதயங்களுக்கு நன்றி. .

    இப்படிக்கு
    சத்தியமூர்த்தி

    We can change everything,
    All come to chennai
    21.09.2014

    sathyamoorthy(Avinashi)
    95433 91234
    9597239898
    Sathyajith (Bangalore)
    09663091690
    Mahendran (chennai)
    7299053549.
    Ravi (kadalur)
    8675567007
    Dharmaraj (Ramnad)
    9843521163
    Kanagaraj (Theni)
    9597734532
    Karuppusamy (erode)
    7200670046
    sivadeepan (trichy)
    8012482604
    Sakthivel (dharmapuri)
    9094316566
    Kulanthaivel (kallakuruchi)
    9994282858
    Deva (vellur)
    9566203861
    Saravanan(vathalagundu)
    9003444100