Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 8, 2014

    நீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்களிடையே பெருகும் வன்முறை கலாசாரம்

    பள்ளிகளில் நீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பெருகி வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் அதிகரித்து வருகிறது.

    இரு ஆண்டுகளுக்கு முன், சென்னையில், வகுப்பு ஆசிரியை, மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கடந்த ஆண்டு திருநெல்வேலியில், கல்லூரி முதல்வர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். இதில் சில மாணவர்கள் கைதாகினர். பள்ளி மாணவர்களிடையே, ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது.
    இதில் ஏற்படும் சண்டை, ராஜபாளையத்தில் ஜாதிய போஸ்டர் அடித்து ஒட்டும் அளவிற்கு சென்றுள்ளது. தற்போது மாணவர்கள், மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் ரிலாக்ஸ் ஆவதற்கு, தையல், ஓவியம், பாட்டு, நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. தற்போது ஓவியம் மட்டுமே உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், மற்ற பாடங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டனர்.
    நீதிபோதனை வகுப்புகளில், நீதி கதைகளை சொல்லி, நன்மை மற்றும் தீமைகளை மாணவர்களுக்கு ஆசிரியர் புரிய வைப்பார். தற்போது நீதிபோதனை வகுப்புகளும் இல்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமனம் இல்லை. இந்நிலை நீடிப்பதால், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பெருகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கல்வித்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

    No comments: