Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 17, 2014

    தந்தை இறந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில் ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார். அந்த நேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார். எனினும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் 18 வயதைக் கடந்த அழகேசன், தனது தந்தை உயிரிழந்ததால் தனக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி விண்ணப்பித்தார். எனினும் தந்தை உயிரிழந்தபோது அழகேசன் சிறுவனாக இருந்ததால் அவருக்கு பணி வழங்க முடியாது என கடந்த 2012-ம் ஆண்டில் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
    இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி, அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

    இதனை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. மனுதாரரின் தந்தை உயிரிழந்தபோது அவர் சிறுவனாக இருந்தார். வேலை வேண்டி விண்ணப்பித்த அவரது தாயார் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும், தனக்குப் பதிலாக மகனுக்கு வேலை வழங்குமாறு கோரி மனுதாரரின் தாயார் கூறவில்லை. ஆகவே, அவருக்கு பணி வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து விட்டனர். மனுதாரரின் தந்தை உயிரிழந்தவுடன் அவரது தாயார் வேலை கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் அப்படியே நிலுவையில் இருந்தது. இந்நிலையில் தாயாருக்குப் பதில் தனக்கு வேலை தர வேண்டும் என கோரி மகன் விண்ணப்பித்தார். தனக்குதான் வேலை வேண்டும் என தாயார் வற்புறுத்தவில்லை. மகனுக்கு வேலை வழங்குவதை அவர் விரும்புகிறார். இந்நிலையில் தாயாரின் விண்ணப்பத்தை காரணம் காட்டி மகனுக்கு வேலை தர மறுக்க இயலாது. கருணை அடிப்படையில் வேலை என்பது உயிரிழந்த அரசு ஊழியரின் ஒட்டுமொத்த குடும் பத்தை பாதுகாக்கதானே தவிர, அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்காக மட்டும் அல்ல. ஆகவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே. அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    No comments: