Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 20, 2014

    கடலில் 40 அடி ஆழத்தில் உள்ள ஹோட்டலில் தங்க 13 வருடமாக காத்திருக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்

    துபாய். பிஜி நாட்டில் உள்ள தனியார் தீவு ஒன்றில் கடலுக்கு அடியில் ஹோட்டல் கட்டுவதற்கான பணி 2001ல் தொடங்கப்பட்டது. 25 அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் கடலுக்கு அடியில் 40 அடி ஆழத்தில் சிறப்பு கண்ணாடி கூண்டுகளை கொண்டு அமைக்கப்பட இருக்கிறது. சிற்றுண்டி விடுதி, உடற்பயிற்சி கூடம், திருமணம்
    நடத்தும் சிறிய ஆலயம் உள்ளிட்ட வசதிகளோடு அமைய உள்ள‌ இருக்கும் இந்த ஹோட்டலில் ஒரு வாரம் தங்குவதற்கு ரூ.7 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது வரை பணிகள் நிறைவடையவில்லை. ஹோட்டல் ப‌ணிகள் நிறைவடைந்தவுடன்  இந்த ஹோட்டலில் தங்குவதற்கு முன் பதிவு செய்த 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 13 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். 

    இந்த கடல் ஹோட்டலைப் பற்றி கூறும்  நிர்வாகிகள், அனைத்துவிதமான பாதுகாப்புகளுடன் உருவாகும் இந்த ஹோட்டல் கடலுக்கு அடியில் மட்டும் இன்றி, கடலுக்கு மேலும் 51 அறைகள் கொண்டதாக இருக்கும். கடலுக்கு அடியில் வரவேண்டும் என்றால், மேலே உள்ள லிப்டை பயன்படுத்த‌ வேண்டும் என்று தெரிவித்தார்.

    No comments: