Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 23, 2014

    சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3 நாள் பணி இடைப்பயிற்சி

    சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மூன்று நாள் பணி இடைப்பயிற்சி நேற்று துவங்கியது. திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில், அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ், திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில், அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி இடைப்பயிற்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் நேற்று துவங்கியது.


    பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதி, தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகேசன், பயிற்சியை துவக்கி வைத்தார். கருத்தாளர்கள் அகஸ்டியன், ரவி ஆகியோர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்றல், கற்பித்தல், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான உத்திகள், மாணவர்கள் செயல்பாடுகள், படித்தல், வாசித்தல் போன்றவை குறித்து பயிற்சி அளித்தனர். முதல் நாள் பயிற்சியில், காலை, 10:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    No comments: