Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 14, 2014

    TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாகவும் கலந்தாய்வு நடக்கும் இடம் முறையாக அறிவிக்கப்படும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லது. காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும். வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்.

    சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.

    உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.

    கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: