Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 24, 2014

    பள்ளிக்கல்வி ஆணைகளை புத்தகமாக வெளியிடுக! பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்

    கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் கவனிப்பு போன்றவற்றில் பயிற்சி அளிக்கும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக, மாவட்டம் தோறும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாமை அரசே நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில் பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (ஆக.23) சென்னை எழும்பூரில் நடைபெற்றது.பள்ளிகளுக்கு கல்வித்துறை வழங்கும் அறிவுரைகளையும், ஆணைகளையும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை தொகுத்து ஆண்டுக்கு ஒரு முறை மலிவு விலையில் புத்தகமாக வெளியிட வேண்டும், தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயக்குழு, பள்ளிகளுக்கு, கட்டணத்தை உயர்த்திக் கொடுக்கும் போது அதற்குரிய காரணங்களை தெரிவிக்கும், குழுவின் ஆணையின் நகலை பெற்றோர்கள் அனைவருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

    தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயக்குழு, கட்டணம் தொடர்பான புகார்களை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும், அனைவருக்கும் சமமான விதத்தில் தரமான கல்வி கிடைத்திட அரசின் முழுப் பொறுப்பிலும், அரசின் செலவிலும் அருகாமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட பொதுப்பள்ளிகள் மூலம் கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.

    சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் “மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜே.ராஜ்மோகன், குழந்தை வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் எழுத்தளார் ஜே.ஜேசுதாஸ், குழந்தைகளை படிக்க வைக்க, கையாள வேண்டிய முறைகளில், பெற்றோர்களின் பங்கு எனும் தலைப்பில் குழந்தைகள் மன நல ஆலோசகர் எஸ்.எம்.ஏ.ஜமாலுதீன் உள்ளிட்டோர் பேசினர். தீர்மானங்களை வலியுறுத்தி பொதுச் செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் எஸ்.ஜாகீர் உசேன் ஆகியோர் பேசினர்.

    No comments: