Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 18, 2014

    அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றி தமிழ் வழி பள்ளிகளை ஊக்குவிக்க ராமதாஸ் கோரிக்கை

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. தமிழகத்தில் தாய்மொழி வழிப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய நிலை தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    தமிழ்நாட்டில் 1980களின் தொடக்கத்தில் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் காளான்களைப் போல முளைக்கத் தொடங்கிய நிலையில், தமிழ் வழிக்கல்வியின் எதிர்காலம் குறித்த வினா எழுந்தது. அதற்கான விடையாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தாய்த் தமிழ் பள்ளி என்ற பெயரில் தமிழ் வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தமிழ் வழிக்கல்வி தான் இவற்றின் முதன்மை நோக்கம் என்றாலும், அதைத் தாண்டி மாணவர்களிடையே தன்னம்பிக்கை, அன்பு, பண்பு, வீரம், மரியாதை, தமிழ்க் கலாச்சாரம் ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    இந்த பள்ளிகளில் கல்வி வழங்கப்படும் முறையை வெளிநாடுவாழ் தமிழர்களும் போற்றிப் பாராட்டுகின்றனர். இப்பள்ளிகளில் சேர்க்கைக் கட்டணமாக வசூலிக்கப்படும் 100 ரூபாயைத் தவிர, கல்விக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால், இந்த பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தாங்களாகவே முன்வந்து குறைந்த ஊதியம் பெறும் போதிலும், அதைக் கூட தர இயலாமல் தாய்த் தமிழ் பள்ளிகள் தடுமாறுகின்றன.

    இப்பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதிலும் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இத்தகைய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் 49 பள்ளிகளை மூடும் நிலை உருவானது. தற்போது செயல்பட்டு வரும் 33 பள்ளிகளும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அவற்றின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமானால், கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழையும், தமிழ் பண்பாட்டையும் வளர்க்கும் தாய்த்தமிழ் பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழ் வழிக் கல்வியை காப்பாற்ற முடியும்.

    எனவே, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தாய்த் தமிழ் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக அறிவித்து அவை தற்போதைய நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இயங்க வகை செய்ய வேண்டும். அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், சீருடைகள், சத்துணவை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பள்ளிகளை படிப்படியாக மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தமிழக அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    1 comment:

    Anonymous said...

    podhum podhum