Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 15, 2014

    கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு

    மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில், பணி ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை. தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' ஜூனில் நடந்தது. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26 ல் நடந்தது.
    அப்போது, மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட 'சர்பிளஸ்' ஆசிரியர்களை, பணிநிரவல் அடிப்படையில் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, கல்வித் துறை உத்தரவிட்டது.

    இப்புதிய பணியிடங்களை, ஜூன் 26 ல் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் 'கவுன்சிலிங்' மூலம் சுமார் 200 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 26 பணியிடங்கள் இந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டது. ஆனால், பணியேற்று ஒரு மாதம் நிறைவுற்றும், அவர்களுக்கு சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


    இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கலந்தாய்வில் கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான அரசு உத்தரவை எதிர்பார்க்கிறோம். பின், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டும். ஓரிரு வாரங்களில் இதற்கு தீர்வு கிடைத்து விடும். அதன்பின், வழக்கம்போல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்," என்றார்.

    No comments: