Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 18, 2014

    கிராம கல்விக்குழு கணக்காளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

    கிராம கல்விக்குழு கணக்காளர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன" என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் உள்ள அலுவலகங்களில், கிராம கல்விக்குழு கணக்காளர்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்ப, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் உள்ள 22 தற்காலிக பணியிடங்கள், எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட திட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணதாரர்கள் 35 வயதுக்கு மிகாமலும், கல்வித்தகுதியாக பி.காம்., உடன் &'டேலி&' பயின்றிருக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலகத்தில் செப்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கணக்காளராக பணியமர்த்தப்பட்ட பின், மாதம் 9,900 ரூபாய் வட்டார வள மையம் மூலம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்களை, அழைப்பு கடிதம் அல்லது அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: